மீரியபெத்தை மண்சரிவு – பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்

335 0

timthumbமண்சரிவு இடம்பெற்று 2 வருடங்கள் நெருங்கியுள்ள நிலையில் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பதாக ஒக்டோபர் 22ஆம் திகதி வீடுகளை கையளிப்பதற்கு தாம் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், வீடுகளில் காணப்படுகின்ற மின்சாரம், நீர், குறைப்பாடுகளை விரைவில் நிவர்த்தி செய்து மக்களிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப் போவதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ன யாப்பா தெரிவித்தார்.

மீரியபெத்த மக்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வீடுகளை மக்களிடம் கையளிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்று மக்கள்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் திகாம்பரம்,

கொத்மலை பகுதியில் நான் எனது அமைச்சரவையின் கீழ் வீடுகளை குறுகிய காலத்தில் கட்டி முடித்துள்ளேன்,

ஆனால் இங்கு வீடுகளை கட்டி முடிப்பதில் சிரமம் காணப்படுகிறது.

இதற்கு காரணம், இப்பிரதேசம் ஒரு அமைச்சிற்கு கீழ் வந்திருந்தால் 6 மாதத்தில் அல்லது 1 வருடத்தில் வீடுகளை கட்டி முடித்திருக்கலாம்.

ஆனால் இங்கு பலதரப்பட்ட நிறுவனங்களின் தலையீட்டில் வீடுகள் நிருமாணிக்கப்பட்டு வருவதால் தாமதம் நிலவுவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்திருந்தார்.

கொஸ்லாந்தை மீறியபெத்த பிரதேசத்தில் 2014.10.29 அன்று இடம்பெற்ற பாரிய மண்சரிவில் உயிர் நீத்த மக்களின் உறவினர்கள் தொடர்ந்தும் பூனாகலை மாகந்த தொழிற்சாலையில் தங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.