தமிழகத்திற்கு மேலும் 10 நாட்களுக்கு காவிரி நீர்

417 0

gaveri-river-rafting_fe

இந்தியாவின் தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு காவிரி நதி நீரைத்திறக்கும்படி, காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவிட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களுருவில் அதிகளவு பொலிஸார்; பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
டில்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேற்பார்வைக்குழு கூட்டத்தின் முடிவில், தமிழகத்திற்கு மேலும் 10 நாட்களுக்கு நீர் திறக்கும்படி உத்தரவிடப்பட்டது. இதற்கு, கர்நாடகா அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், நீர் தர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெங்களுரு உள்பட பல்வேறு இடங்களில் தமிழகத்திற்கு எதிராக மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரு, மைசூரு போன்ற இடங்களில் அதிகளவு பொலிஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிராக வன்முறை நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், தீவிர கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக, கர்நாடகா மாநில பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.