வட மாகாண முதல்வர் மன்னிப்புக் கோர வேண்டும்! – உதய கம்மன்பில

372 0

kambanbilaதமிழ் ஈழத்தை வழங்க முடியாமல் போனது தொடர்பில் கவலை அடைவதாக தனது இறுதி ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜே.ஆர்.ஜயவர்தன கூறினார் என்று வட.மாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார். இது உண்மைக்கு புறம்பான விடயம். ஜே.ஆர்.ஜயவர்தனவின் மருமகனான பிரதமர் முன்னிலையில் நாட்டு மக்களுக்கு பொய்யான விடயங்களை தெரிவித்தமைக்காக வடக்கு முதலமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.