2020இல் ஐக்கியதேசியக் கட்சியே ஆட்சியமைக்குமாம்

313 0

ranil-wickremesinghe2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சி அமைக்கும் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது சிறீலங்காவின் அதிபராக இருக்கும் மைத்திரிபால சிறிசேன தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என 2015ஆம் ஆண்டு தேர்தலின்போது உறுதியளித்தார். இருப்பினும், மீண்டும் 2020ஆம் ஆண்டு சுதந்திரக்கட்சியில் மீண்டும் போட்டியிட்டு அதிபராவதாகக் கூறியதையடுத்து, ஐக்கியதேசியக் கட்சியினர் பிரதமரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2020ஆம் ஆண்டு தான் சிறீலங்காவின் அதிபராக வருவேன் என எதிர்பார்த்தே தேர்தலில் போட்டியிடுவேன்.இது தொடர்பில் மக்களே இறுதித் தீர்மானம் எடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.