இன்புலுவன்சா நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் 2பேர் மரணம்

309 0

nurseநாட்டில் தற்போது பரவிவரும் இன்புலுவன்சா ஏ.எச்.வன்.என்.வன். நோய் தொற்றுக்கு ஆளாகி புத்தள மாவட்டம் சிலாபம் பிரதேசத்தில் இருவர் மரணமாகியுள்ளனர்.

இன்புலுவன்சா ஏ.எச்.வன்.என்.வன்.நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது சிகிச்சையளிக்கமுடியாதுள்ளதாகவும், அதற்குரிய மருத்துவ சாதனங்கள் வைத்தியசாலைகளில் இல்லையெனவும் இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த நோயானது தற்போது நாடுமுழுவதும் வேகமாகப் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் குறித்த நோயினால் 4 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்களில் இருவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.