இராணுவத்திற்கிடையே முரண்பாடு துப்பாக்கிச் சூட்டில் இராணுவ சிப்பாய் பலி

364 0

firing_ciவவுனிக்குளம் – பாலிநகர் பகுதியில் உள்ள படைமுகாம் ஒன்றில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வவுனிக்குளம் – பாலிநகர் பகுதியில் உள்ள இலங்கை இராணுவத்தின் பத்தாவது காலாட்படை முகாமில் கடமையாற்றிவந்த இராணுவ வீரரே மேற்படிச் சம்பவத்தில் உயிரிளந்துள்ளார்.
மாத்தறை மாவட்டம் – வில்கடுவ என்ற இடத்தினைச் சேர்ந்த டி.ஏ.ஏக்கநாயன்ன (வயது 30) என்பவரே இச் சம்பவத்தில் உயிரிளந்தவர் ஆவர்.
குறித்த படைமுகாமில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகளினால் அவருக்கு ஏற்பட்ட அவமாணத்தினால் அவர் தன்னை தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று சக இராணுவ சிப்பாய்களால் தெரிவிக்கப்பட்டுள்ள போதும், உத்தியோக பூர்வமாக அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தமைக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.