பன்னிரு நாட்கள் தன்னையே ஆகுதியாக்கி, கடைசியில் மக்களுக்காகவே பசித்த வயிற்றோடு உயிரைத் துறந்த திலீபனை நினைவுகூரும் முகமாக யேர்மன் Stuttgart நகரில் நேற்றைய தினம் அடையாள உணவுதவிர்ப்பு நடைபெற்றது. இவ் நிகழ்வில் தியாகச்சுடர் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவேந்தும் நிகழ்வு நாளைய தினம் தமிழர் விளையாட்டு விழா அரங்கிலும் அதிகாலை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.