கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

340 0

பேலியகொட, மானெல்கம களனி பிரதேசத்தில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 08 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் களனி பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Leave a comment