டொலர்களுடன் இலங்கை அகதி கைது

346 0

arestஒரு லட்சம் அமெரிக்க டொலர்களுடன் இலங்கையைச் சேர்ந்த அகதி ஒருவர், தமிழ் நாட்டின் தனுஷ்கோடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த அருள் ஜெயரத்தினம் என்ற 47 வயதான ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

தனுஷ்கோடி – 3ஆம் மணல்திட்டு பகுதியில் படகொன்றில் கொண்டு சென்று இறக்கிவிடப்பட்ட நிலையில், நீண்டநேரமாக அங்கு அவர் நின்றிருந்தார்.

இது குறித்து காவற்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, மண்டபம் கடலோர காவற்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.