ஒழுக்கம் மற்றும் பயிற்சிகளில் இலங்கை இராணுவம் முன்னிலையில் உள்ளது

384 0

sl-armyஇந்தநாட்டின் இராணுவத்தினர் எந்தவொரு இக்கட்டான நிலைமைக்கும் முகங்கொடுக்க கூடிய அளவில் தயாராகவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் பாதுகாப்பு பிரிவானது ஒழுக்கம் மற்றும் பயிற்சிகளில் முன்னயில் திகழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கியநாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகள் தொடர்பான பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

80 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டிருந்தனர்.

அதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கலந்துக்கொண்டிருந்தார்.

இந்த மாநாடானது இந்த மாதம் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை லண்டனில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.