ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் படகுகளில் வந்து நடுக்கடலில் 9 நாட்கள் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.


இந்நிலையில், இந்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிறிய கப்பல் மற்றும் இரு படகுகளில் அவர்கள் ஸ்பெயின் நாட்டை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.
அவர்களில் பலர் உடல்நலக்குறைவால் பாதிகப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், 123 சிறுவர் – சிறுமியர் மற்றும் 7 கர்ப்பிணி பெண்களும் அந்த கப்பலில் வருவதால் தொண்டு நிறுவன ஊழியர்கள், டாக்டர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் அவர்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றனர்.