பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழக கவர்னர் வாழ்த்து

315 0

201609101732160838_tamil-nadu-governor-praised-the-paralympic-gold-medalist_secvpfபாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பாராட்டும் பரிசும் குவிந்தவண்ணம் உள்ளன. மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், தங்கம் வென்ற மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மகன் மாரியப்பன், பாராலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்றது பெருமை அளிப்பதாகவும், சாதிப்பதற்கு உடற்குறைபாடு ஒரு தடையல்ல என்று மாரியப்பன் நிரூபித்திருப்பதாகவும் ஆளுநர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஞ்சாப் வீரர் வருண் பட்டிக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.