கதிர்காமத்தில் விகாராதிபதி ரம்புக்வெல்ல சங்கானந்த தேரர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

299 0

pikkuகதிர்காமம் வல்லி குகை ரஜமகா விகாரையின் விகாராதிபதி ரம்புக்வெல்ல சங்கானந்த தேரர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று மாலை இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை விகாரைக்குள் புகுந்த இனந்தெரியாத குழுவொன்று கூரிய ஆயுதங்களால் பிக்குவைத் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த தேரர், தற்பொழுது, தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.