ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு

339 0

201609091012472403_144-ban-order-in-ramanathapuram-district-today-from-today_secvpfஇமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இமானுவேல்சேகரன் நினைவு தினம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று (9-ந்தேதி) முதல் வருகிற 15-ந்தேதி வரையும், அக்டோபர் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலும் வெளி மாநில, மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்களில் ஆட்களை ஏற்றி வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பிறப்பித்துள்ளார்.