சைபீரியாவில் சிவப்பாக உருமாறிய நதி

375 0

201609090437207956_river-red-metamorphic-near-siberia_secvpfசைபீரியாவில் நதியானது திடீரென்று ரத்தச் சிவப்பாகியுள்ளது. இதன் முக்கிய காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள நிக்கல் ரசாயன ஆலையை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  சைபீரியாவின் வட பகுதியில் பெரும்பாலான மக்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக அமைந்துள்ள நதி டல்டிகான். இந்த நதியில் இருந்துதான் இப்பகுதியில் உள்ள பெருவாரியான ரசாயன ஆலைகளும் தண்ணீர் சேகரித்து வருகின்றன.
மட்டுமின்றி அந்த ஆலைகளின் கழிவுகளும் இந்த நதியிலேயே கொட்டப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பனிக்காலத்தில் மட்டுமே பெருக்கெடுத்து ஓடாத இந்த நதியானது திடீரென்று ரத்தச் சிவப்பாகியுள்ளது. இதன் முக்கிய காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள நிக்கல் ரசாயன ஆலையை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நடிஸ்டா மெட்டாலுரிஜிகல் பிளாண்ட் என்ற இந்த ஆலையில் இருந்து கொட்டப்படும் கழிவு நீரால் தற்போது இந்த நதி ரத்தச் சிவப்பாக உருமாறியுள்ளது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களால் தங்களது தேவைகளுக்கு இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  ஆலையானது, சுற்றுச்சூழல் குறித்த அனைத்துவகை முன்னேற்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மட்டுமின்றி நதியின் தண்ணீரில் ஏற்பட்ட மாறுதலுக்கு பின்னர் கழிவு நீரை வெளியேற்றுவதை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட நதி சிவப்பாக உருமாறுவதற்கு இந்த ஆலையின் கழிவுகள் அல்ல எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது.

ஆனால் ஆலை நிர்வாகத்தின் இந்த பேச்சுக்களை அப்பகுதி மக்கள் நம்புவதாக இல்லை. மட்டுமின்றி இந்த நதியானது சிவப்பாக மாறுவது இது முதன் முறையல்ல என தெரிவித்துள்ள மக்கள், கடும் பனிப்பொழிவு காலகட்டங்களில் இப்பகுதியில் பனியும் சிவப்பாக மாறும் என தெரிவித்துள்ளனர்.