மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை

348 0

779774926presசிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இன்று (வெள்ளிக்கிழமை) காலை வருகைதரும் மைத்திரிபால சிறிசேன சுப்ரமணியம் பூங்காவில் நடைபெறவிருக்கும் போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.இறுதி நிகழ்வாக இன்று மாலை யாழ்ப்பாணக் காவல்துறையினருக்கான புதிய கட்டடத்தொகுதியைத் திறந்துவைக்கவுள்ளார்.

இந்த நிகழ்வுகளில், அமைச்சர் சாகல ரட்ணாயக்க இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், காவல்துறைமா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.