சம்பூர் காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

370 0

download-47திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூர் நீலாங்கேணி காட்டுப்பகுதியில் நான்கு வயதுச் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அஜந்தா என்ற சிறுமியே கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி நேற்றைய தினம் காணாமல் போயுள்ளார் என அவரது பெற்றோராலும், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களாலும் சம்பூர் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தேடுதல் மேற்கொண்ட காவல்துறையினர் சிறுமி கொலைசெய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்க்கப்பட்ட சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.