பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர், அமைச்சர் நவீன் திஸாநாயக்க தமக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தன்னை தகாத வார்த்தைகளின் திட்டியதாகவும், பிரதி சபாநாயகர் பதவிலிருந்த தன்னை விலகுமாறு அச்சுறுத்தியதாகவும், அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.