9 மாத குழந்தையை 2000 ரூபாவிற்கு விற்க முயன்ற தாய் கைது

375 0

227352607Child9 மாத குழந்தையை விற்க முயன்ற தாய் ஒருவர் கண்டி பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வெளிநாடொன்றில் தொழில்புரிந்து வந்த நிலையில் அங்கேயே குறித்த குழந்தையையும் பிரசவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பே இந்தப் பெண் குழந்தையுடன் இலங்கை வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் ஊடாக 2000 ரூபாவிற்கு குறித்த குழந்தையை விற்கும் போதே குறித்த பெண்ணும்,முச்சக்கர வண்டி சாரதியும் கட்டுகஸ்தொட்ட பொலிஸ் பிரிவில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.