தனியார் காணிகளில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படும் – கருணாசேன கெட்டியாராச்சி

328 0

global_dialog_20150917_04p3திருகோணமலை மாவட்டத்தில் தனியார் காணிகளிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி உறுதி வழங்கியுள்ளார்.

திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சிக்குமிடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போதே பாதுகாப்புச் மேற்கண்டவாறு வாக்குறுதி வழங்கினார்.

முக்கியமாக குரங்கு பாஞ்சான் இராணு முகாம், சூரங்கள் இராணுவ முகாம், தோப்பூர் பத்து வீட்டுத்திட்ட இராணுவ முகாம் மற்றும் மூதூர் தக்வா நகர் கடற்படை முகாம், கெல்த்கெயார்சென்டர் அமைந்திருக்கும் தனியார் காணியும் சேர்ந்திருக்கும் கடற்படைமுகாம், புல்மோட்டையில் அமைந்திருக்கும் இராணுவ முகாம் ஆகியவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி வழங்கியுள்ளார்.