காணாமல் போன வர்த்தகர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

322 0

businessmen-720x480தங்க நகை ஏல விற்பனைக்காக பண்டாரகம பிரதேசத்தில் இருந்து திருகோணமலைக்கு ஒரு கோடி ரூபாய்களுடன் சென்ற வர்த்தகர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்தார்.

இவரைத் தேடுவதற்கு பொலிஸ் விசேட குழுக்கள் 5 நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,குறித்த வர்த்தகர் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக பொலிஸ் தரப்பை மேற்கோள் காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மொஹமட் நஸ்ரின் என்ற 35 வயதான குறித்த வர்த்தகர் காணாமல் போனதாக முறைபாடு செய்த அவரது தந்தை வர்த்தகர் உயிருடன் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக ஜோதிடர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் குறித்த வர்த்தகருடன் திருகோணமலைக்கு சென்ற ஏனைய மூன்று நபர்களிடமும் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.