கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை பாரா­ளு­மன்­றக்­குழு தீர்­மா­னிக்கும்.!

309 0

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டு­மா­க­வி­ருந்தால் இதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு மற்றும் தீர்­மானம்  என்­ன­வென்­பதை எமது பாரா­ளு­மன்­றக்­குழு கூடி ஒரு­மித்த தீர்­மானம் மேற்­கொள்ளும். இது தொடர்பில் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­றக்­குழு கூட­வுள்­ளது என்று எதிர்க்­கட்­சித்­ த­லைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்

சமூ­க­சே­வை­யா­ளரும் பிர­பல வாத்­த­க­ரு­மான அமரர் கந்­தையா துரை­ரா­சாவின் புத்­திரர் அமரர் விஜ­ய­குமார் (மயூரன்) ஆகி­யோரின் ஞாப­கார்த்­த­மாக உப்­பு­வெ­ளியில் அமைக்­கப்­ப­ட­வுள்ள முதியோர் இல்­லத்­துக்­கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்­றைய தினம் நடை­பெற்­றது. இதன்­போது இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய    வினா­வுக்கு பதில் அளிக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்;.

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வரு­வது வரா­தது  பார­ளு­மன்றின் நடை­மு­றையில் சாதா­ரண விட­ய­மாகும்.  பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­க­வுக்கு எதி­ராக பாரா­ளு­மன்றில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது என வதந்­திகள் வரு­கி­றதே தவிர அது இன்னும் ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதற்கு கூட்டு எதி­ர­ணி­யி­னரும் சில அதி­ருப்­தி­யா­ளர்­களும் முயற்­சிக்­கி­றார்­க­ளென அறி­ய­மு­டி­கி­றது.

அவ்­வாறு கொண்­டு­வ­ரப்­ப­டு­மானால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாம் என்ன முடிவு எடுக்­க­வேண்­டு­மென்­பதை பாரா­ளு­ம­னற குழு கூடியே ஒரு கூட்­டுத்­தீர்­மானம் மேற்­கொள்வோம். நம்­பிக்­கை­யில்­லாத்­தீர்­மானம்

தொடர்பில் நாம் என்ன தீர்­மானம்  எடுக்­க­வேண்­டு­மென்­பதை எமது பாராளு மன்ற குழு கூடி முடி­வு­களை மேற்­கொள்ளும்.

எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை பாராளு மன்றில் கூடும்­படி அழைப்பு விடுத்­துள்ளோம். அப்­போது கூடும் நாம் பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ரணை வந்தால் என்­ன­செய்­ய­வேண்டும் என ஒத்­த­மு­டி­வாக எடுப்போம். எம்­மைப்­பொ­று­த­த­வரை இன்­றைய ஆட்சி தொட­ர­வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

இந்த அரசு இரண்­டரை வரு­டங்கள் ஆடசி நடாத்­தி­யுள்­ளது. தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் சில­மு­யற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அம்­மு­யற்­சிகள் இல­கு­வா­ன­தா­க­வி­ருக்­க­வில்லை. ஆனால் அம்­மு­யற்­சிகள் தொட­ரப்­ப­டு­கின்­றன. தொட­ரப்­பட்ட வேளை­யில்தான் உள்­ளு­ரா­டசித் தேர்தல் வந்­தது. இந்த அர­சாங்கம் தொட­ர­வேண்­டு­மென்­பது எமது எதிர்­பார்ப்­பாகும். ஆனால. எதிர்­கா­லத்தில் என்ன நடை­பெ­றும என்­பதை எம்மால் திட்­ட­வட்­ட­மாக கூற­மு­டி­யாது. ஆனால் அர­சியல் தீர்வு முயற்­சிகள் தொட­ர­வேண்டும். தொடர்­வ­தன்­மூலம் நாட்டில் ஒரு அர­சியல் சாசனம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். அது பாரா­ளு­மன்றில் நிறை­வேற்­றப்­பட்டு அமு­லுக்கு வர­வேண்டும்.

தீர்­வைப்­பெறும் விட­யங்­களில் தமிழ் மக்கள் கூடு­த­லான ஆர்­வத்­துடன் இருக்­கி­றார்கள் என்­பதே உண்மை  நியா­ய­மான தீர்வு கொண்டு வரப்­ப­ட­வேண்டும் என்­பதில் நாம் ஆர்­வ­மா­கவும் கவ­ன­மா­கவும் இருக்­கிறோம். தேசி­யப்­பி­ரச்­சனை தீர்த்து வைக்­கப்­ப­ட­வேண்டும். தீர்த்து வைக்­கப்­ப­டாமல் நாட்­டி­லுள்ள எப்­பி­ரச்­ச­னைக்கும் நல்ல முடிவு காண­மு­டி­யாது. ரணிலின் அர­சாங்­க­மா­வி­ருக்­கலாம் ஜனா­தி­ப­தியின் ஆட­சி­யாக இருக்­கலாம் இல்லை மஹிந்த ஆட­சி­யாக விருக்­கலாம் இதுதான் உண்மை நிலை. தீர்­கப்­ப­டாத நிலையில் எந்த அரசும் நிலைத்­தி­ருக்­கு­மு­டி­யாது.

நடந்து முடிந்த உள்­ளு­ரா­டசி மன்ற தேர்தல் முடி­வுகள் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லின்­போதும் பொது தேர்­த­லின்­போதும் மக்கள் வழங்­கிய ஆணையை எந்த விதத்­திலும் பாதிக்­க­வு­மில்லை நீக்­க­வு­மில்லை. மக்கள் இன்­றைய அர­சுக்கு வழங்­கிய ஆணை தொட­ரு­கி­றது. 2015 ஆம் ஆண்டு மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷ­மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக வர தீவிர முயற்சி எடுத்தார். அதில் அவர் தோல்வி கண்டார். உள்­ளு­ரா­டசி தேர்தல் முடி­வு­க­ளா­னது அர­சாங்­கத்­தின்­மீது மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அதி­ருப்­தியே தவிர மஹிந்த ராஜ­ப­க்ஷவின்  மீது கொண்ட பிர­யத்­த­ன­லல்ல. மஹிந்­தவின் எந்த செய­லுக்­கா­கவும் உள்­ளு­ரா­டசி தேர்­தலில் மக்கள் அவ­ருக்கு வாக்­க­ளிக்­க­வில்லை.

Leave a comment