வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்றில் முன்னிலையாக அறிவித்தல்

298 0

vaas-gunawardenaமரண தண்டனை பெற்றுள்ள முன்னாள் பிரதி காவல்மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன ஆகியோரை நீதிமன்றில் முன்னிலை செய்யுமாறு இன்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மாலபே தகவல் தொழிநுட்ப கல்லூரியில் கல்வி பயின்ற மாணவன் கடத்திச் செல்லப்பட்டு தக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி இவர்களை நீதிமன்றில் முன்னிலை செய்யுமாறு, சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நீதிபதி இவ்வாறு அறிவித்தல் விடுத்தார்.

மாலபே கல்லூரி மாணவன் கடந்த 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கடத்திச் செல்லப்பட்டு தக்கப்பட்டார்.

இந்த சம்வம் தொடர்பில் இவர்கள் இருவர் உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.