சிகிரியா – பிதுரங்கல – வாவியில் இருந்து அடையாளம் காணப்படாத பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு காவல்துறையினருக்கு இடைக்கப்பெற்ற அவசர தொலைபேசி அழைப்பு ஒன்றுக்கு அமைய அந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் மரணமாக விதம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் மரணித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சடலம் மீட்கப்படும் போது பழுதடைந்து இருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றன.
சடலத்தின் அருகில் இருந்து மதுபான போத்தல் ஒன்றும் விஷபோத்தல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.