132 பணிபெண்கள் நாடு திரும்பினர்

342 0

Kuwaitசவுதி மற்றும் குவைட் நாடுகளில் பணிபெண்களாக பணிபுரியச் சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த இலங்கை பெண்கள் 132 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று அதிகாலை இவர்கள் நாடு திரும்பினர்.

அவர்கள் அந்தந்த நாடுகளின் தூதுவராலயங்கள் மற்றும் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் இதுவரை காலம் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நாடு திரும்பியவர்களின் இருவர் சுகவீனமுற்றிருந்த நிலையில் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.