விபத்து – நான்கு பேர் பலி – 6 பேர் காயம்

318 0

accident1_5-720x480கடந்த 24 மணி நேரத்தில், மூன்று பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நான்கு பேர் பலியாகினர்.

சம்பவங்களில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை – மாத்தளை வீதியின் நாலந்த நீர்தாங்கிக்கு அருகில் டிபர் ரக வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் ஒன்றோடு ஒன்று, நேற்று மோதிக்கொண்டதில் இருவர் பலியாகினர்.

இதனிடையே, ரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் குருவிட்ட – நல்லபிடிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் இருவர் பலியாகினர்.

பாரவூர்தி ஒன்றும் முச்சக்கரவண்டியென்றும் மோதி இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதுபோல், பதுளை – மீகஹாகிவுல – பிடமாருவ பகுதியில் வேன் ரக வானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீகஹாகிவுல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் பாடுகாயமடைந்த ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.