கொள்ளை – மூன்று பேர் கைது

322 0

8005c88c87f6c27756432e07d4394189f37ஹட்டன் – கினிகத்தேன பிரதேசத்தில் நகையகம் ஒன்றில் 28 லட்சம் ரூபா பெறுமதியான ஆபரணங்களை கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபரணங்களை கொள்வனவு செய்யும் போர்வையில் வந்த இவர்கள், கடந்த இரண்டாம் திகதி இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டனர்.

நகையகத்தின் உரிமையாளரை ஆயுத முனையில் அச்சுறுத்தி ஆபரணங்களை கொள்ளையிட்ட இவர்கள், பின்னர் சிற்றுந்தில் தப்பிச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.