இலங்கை யுவதி அமெரிக்காவில் மீட்பு

340 0

201607222055394781_OHP-Plane-crash-southeast-of-Enid-claims-two-lives_SECVPF.gifஇலங்கை யுவதி ஒருவர் அமெரிக்காவில் அடிமைப்போல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் தெரியவந்துள்ளது.

அமரிக்காவில் பணிபுரியும் மலேசிய ராஜதந்திரி ஒருவரும் அவரின் மனைவியும் குறித்த இலங்கை யுவதியை அடிமைப்போல் நடத்தி வந்துள்ளதாக ‘நியூயோர்க் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த மலேசிய ராஜதந்திரி குடும்பத்தினர், பரிமளாதேவி மாலா என்ற இலங்கை பெண்ணை நாளொன்றுக்கு 15 மணித்தியாலங்கள் பணிசெய்ய வைத்துள்ளனர்.

உரிய வேதனத்தையும் வழங்கியிருக்கவில்லை.

அத்துடன் கோயில் வழிபாடுகளுக்கு கூட அவர் அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் குறித்த இலங்கை யுவதி, கொடுமை தாங்காது அமரிக்க புலனாய்வு பிரிவில் முறையிட்டுள்ளார்.

இதனை அடுத்து அவர் மீட்கப்பட்டு, தற்போது தர்மநிலையம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.