இப்ராஹீம் அன்ஸார் நாடு திரும்பினார்.

330 0

1992058424Untitled-1மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹீம் அன்ஸார் நாடு திரும்பியுள்ளார்.

கோலாலம்பூர் வானூர்தி நிலையத்தில் வைத்து இலங்கையின் உயர்ஸ்தானிகர் மீது நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், பிரச்சினைகளை கருத்திற்கொண்டு அவரை, வெளியுறவு அமைச்சு நாட்டுக்கு திருப்பி அழைத்திருந்தது.

இதேவேளை, இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹீம் அன்ஸார் தாக்கப்பட்டமை தொடர்பில் அந்த நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மலேசியாவின் காவல் மா அதிபர் டான் ஸ்ரீகாலித் அபூ பக்கார் இதனை தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் வானூர்தி நிலையத்தில் வைத்து இலங்கையின் உயர்ஸ்தானிகர் மீது நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் தற்போது தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.