நாணய கடத்தல் – மாலைத்தீவு பிரஜை கைது

363 0

Arrestedகட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை கொண்டுச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 53 வயதான மாலைத்தீவு நாட்டு பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 6.30 அளவில் குவைட் வானூர்தி சேவைக்குச் சொந்தமான வானூர்தி மூலம் மாலைத்தீவுக்கு செல்ல இருந்த நிலையிலேயே சுங்க பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.

இவர் தமது பயண பொதியில் 67 லட்சம் ரூபா பெறுமதியான 45 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கொண்டுச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.