விபத்தில் மூன்று பேர் பலி

476 0

accident-moterகுருநாகல், பொதுஹெர – மதவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.

லொறி ஒன்றும் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் நேற்று மாலை 6.30 நிகழ்ந்துள்ளது.

சம்பத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 28 வயதான ஒருவர், 10 வயது சிறுவன் மற்றும் ஒருவயதான குழந்தையே பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.