வேதனையை அனுபவிக்கின்றேன்-மகிந்த ராஜபக்ச

350 0

80026898_025259546-1ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தமாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள, அந்நாட்டு சமஷ்டி பொலிஸார் மேற்கொண்டு வரும் இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை குறித்து பகிரங்க இடங்களில் கருத்து வெளியிடுவதை தவிர்த்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மைத்திரி சம்பந்தமான இந்த குற்றச்சாட்டு தொடர்பான விபரமான தகவல்களை கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதியிடம் வழங்கிய போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தும் போது ஏற்படும் வேதனையை தான் தற்போது நன்கு அனுபவித்து வருவதால், ஜனாதிபதி சம்பந்தமான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் அது குறித்து கருத்து வெளியிட வேண்டாம் எனக் ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.