மகிளா காங். செயலாளர் ஹசினா புகார்

320 0

201609031456098188_slander-spread-facebook-freeze_SECVPFமகளிர் காங்கிரஸ் செயலாளர் ஹசினா சையத் பற்றியும், காங்கிரஸ் பெண் பிரபலங்கள் பற்றியும் பேஸ்புக்கில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

இதுபற்றி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஹசினா புகார் செய்தார். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அரிமணி என்ற பெயரில் பாலகிருஷ்ணன் என்பவர் இதுபோன்று அவதூறு பரப்புவதாகவும், பெண்களை பற்றி ஆபாசமாக சித்தரிப்பதாகவும் கூறப்பட்டிருந்த பேஸ்புக் பக்கத்தை பார்த்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் குறிப்பிட்ட பேஸ்புக் முடக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசார் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.