3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மன்னாரில் – இந்தியர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது

300 0

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மன்னார் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.

2.24 கிலோ கிராம் பெறுமதியான இந்த ஹெரோயினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

புலனாய்வு பிரிவினாரின் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது 5 இலங்கையர்களும் ஒரு இந்தியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் பள்ளிமுல்லை பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போதை பொருள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவர் மற்றும் போதைபொருள் தொடர்பில் வவுனியா விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது.