கட்சிக்கு துரோகம் இழைத்த எவரும் வெற்றியீட்டியதில்லை

536 0

Vijith-vijayamuniகட்சிக்கு  துரோகம் இழைத்த எவரும் வெற்றியீட்டியதில்லை என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக  தனித்தும் குழுக்களாகவும் பல தடவைகள் கிளர்ச்சிகள் செய்யப்பட்ட போதிலும் அவை எதுவும் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்து பசில் ராஜபக்ஸவினால் ஒருநாளும் கட்சியொன்றை தனித்து அமைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சிக்கு எவ்வித எதிர்காலமும் கிடையாது எனவும், இந்தக் கட்சியானது கைவிடப்பட்ட ஓர் கட்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவது குறித்து ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a comment