65ஆம் ஆண்டு நிறைவு விழா புறக்கணிப்பு – மகிந்த அணி

346 0

Dullas-Alahapperuma1-720x480ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மேளன கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

நாளை மறுதினம் இந்த கூட்டம் குருநாகலில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் கூட்டத்தை புறக்கணிப்பதென்று ஸ்ரீலங்கா சுதநதிரக்கட்சியின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மூன்று காரணங்களை முன்வைத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.