திருகோணமலையில் 56 துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது

347 0

N0032361298028738572A_1-415x260-300x188திருகோணமலை-தென்னமரவாடி கலப்பு பகுதியில் நான்காவது தடவையாக நேற்று (01) இரவு டி 56 துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னமரவாடி கலப்பு பகுதியில் துப்பாக்கி ஒன்று தென்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

இதேவேளை, மீட்க்கப்பட்ட துப்பாக்கி தொடர்பான அறிக்கையினை நீதிமன்றிற்கு சமர்பிக்கவுள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இது குறித்த விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது