அவன்கார்ட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது தாமே – மஹிந்த

313 0

Mahinda-Rajapaksa-on-the-way-to-Palestine-720x480அவன்கார்ட் வியாபாரத்துக்கு அனுமதி வழங்கியது தாமே என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பனை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இது தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு மஹிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கோடி ரூபாய்கள் இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கைகளும் இதுவரை எடுக்காத நல்லாட்சி யுத்தத்தை நிறைவு செய்த பின்னரும் இராணுவத்தினருடன் இணைந்து நாட்டுக்கு சேவையாற்றிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டுக்கு அதிகமான வருமானத்தை ஈட்டித் தந்தது எவன்கார்ட் நிறுவனமே என்று பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.