இலங்கையில் 3 வருடங்களில் 9657 தற்கொலைகள்

318 0

rope_hanging_suicideகடந்த 3 வருடங்களில் இலங்கையில் 9657 பேர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக காவல்துறை திணைக்கள ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இதில் 71 வயதிற்கு அதிகமான ஆண்களே அதிகம் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும், அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இரத்தினபுரி, கண்டி, அநுராதபுரம் மற்றும் குருநாகல் காவல்துறை பிரிவுகளிலே அதிகமானோர் தற்கொலை செய்துக் கொண்டு தமது உயிரை மாய்த்துள்ளதாகவும் காவல்துறை திணைக்கள அறிக்கை தெரிவி;த்துள்ளது.

இதேவேளை கல்கிஸ்ஸ, சீதாவக்கபுர, நிக்கவரெட்டிய, எல்பிட்டிய மற்றும் பதுளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மிகவும் குறைந்தளவு தற்கொலை சம்பவங்களே பதிவாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.