“எழுக தமிழ்“ – மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்காக மக்களை அணிதிரட்டும் பணி

287 0

unnamed (4)எதிர்வரும் செப்ரெம்பர் 24ம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் முற்றவெளியில் நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வுக்கு எழுக தமிழ் எனப் பெயரிடப்பட்டு, அந்நிகழ்வின் முக்கியத்துவம் பற்றி பொதுக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை அணிதிரட்டும் பணிகள் இன்று முதல் யாழ் குடாநாட்டில் தீவிரமடைந்துள்ளது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு வீடுதிருபும் மக்களுக்கு ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் எழுக தமிழ் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், தமிழ் மக்கள் பேரவையின் பங்காளி அமைப்புக்களின் பிரதிநிதிகளால் நிகழ்வின் முக்கியத்துவம் பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டது.