பான்கிமூனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவண பலய அமைப்பு ஆர்ப்பாட்டம்

307 0

UN-Protest-14இலங்கைக்கு பயணம் செய்துள்ள ஐநா செயலர் பான்கிமூனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரது வருகையைக் கண்டித்தும் கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்துக்கு முன்பு ராவண பலய என்ற அமைப்பு பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான பிக்குகள் கலந்துகொண்டுள்ளதுடன், பான்கிமூன் தமிழ் மக்களுக்கு ஆதரவானவர் எனவும், சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப்போவதில்லையெனவும் கடும் சிங்களப் பேரினவாத அமைப்புக்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்பாக ஒன்றுகூடிய பிக்குகள் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும், அலுவலக அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கூட்டு எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவும் கலந்துகொண்டார்.