பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குக

360 0

Caption-001-1200x550பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின், இனரீதியான பாதுபாடுகளை களைவதற்கான குழுவின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த விடயம் வரவேற்கப்படுகிறது.

ஆனால் தொடர்ந்தும் இந்த சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

எனவே விரைவாக பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.