மலேசிய இந்து ஆலயத்தை தாக்க முயற்சி – ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது

436 0

News-3_CTY_23727மலேசியாவில் இந்து ஆலயம் ஒன்றில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மூவர் கைதாகியுள்ளனர்.

மலேசிய காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

மலேசிய பத்துமலை முருகன் ஆலயத்தின் மீது அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கபபட்டுள்ளது.

மலேசியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த தாக்குதல் நடத்தப்படவிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது அவர்கள் கைதாகியுள்ளனர்.

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.