தமிழக மீனவர்கள் போராட்டம்

382 0

fishermenஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி ராமேஷ்வரம் கடற்றொழிலாளர்கள் மீண்டும் கடல்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

நாளை முதல் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டதாக இலங்கையில் நான்கு தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் 100க்கும் அதிகமான தமிழக கடற்றொழிலாளர்களின்; படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே இந்த கடற்புறக்கணிப்பு நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.