ராமேஷ்வரம் பகுதியில் போதைப் பொருள்

356 0

ganja10_CIதமிழ் நாடு – ராமேஷ்வரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா போதைப் பொருள் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோர காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 17 கிலோ எடை கொண்ட கஞ்சா பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கடற்கரை மணலில் இது புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.