பான் கீ மூன் குறித்து எதிர்பார்ப்பு

379 0

BanKiMoonUN_largeஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனின் இலங்கை விஜயம் தொடர்பில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

3 நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பான் கீ மூன் நேற்று இலங்கை வந்தார்.

இந்த நிலையில் தாங்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் காணிப்பிரச்சினைகள், காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடயங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு, இந்த விஜயம் தீர்வைத் தரும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

எனவே பான் கீ மூன் இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அந்த ஊடகம் கோரிக்கை விடுத்துள்ளது.