காஞ்சி மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மருத்துவமனையில் அனுமதி

341 0

201608310512310912_Kanchi-Shankaracharya-Jayendra-Saraswathi-hospitalised-in_SECVPFகாஞ்சி மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் திடீர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு ( 81) விஜயவாடாவில் உள்ள மடத்தில் திடீரென உடல் நலம் குன்றி மயக்கம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த மட உதவியாளர்கள் மற்றும் பக்தர்கள் அவரை விஜயவாடாவில் உள்ள ஆந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ சி யு) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர் ரவிராஜு தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.பின்னர் டாக்டர் ரவிராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெயேந்திரருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் சோடியம் அளவு குறைந்துள்ளது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை. சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டோம். மாலை வரை அவர் ஐசியு வில் கண்காணிக்கப்படுவார். பின்னர் அவரது உடல் நலம் தேறியதும் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயேந்திரருக்கு உடல் நலம் குன்றிய தகவல் அறிந்த ஏராளமான பக்தர்கள் மருத்துவமனை முன் கூடினர். ஜெயேந்திரர் உடல் நலம் சீராக வேண்டுமென பிராத்தனையில் ஈடுபட்டனர்.