வவுனியாவில் புத்தர் சிலை உடைப்பு!

348 0

625.0.560.320.160.600.053.800.668.160.90-61கனகராயன் குளப் பகுதிக்கருகில் இருந்த காவல்துறை நிலையத்துக்கருகிலிருந்து புத்தர் சிலையை இன்று அதிகாலை இனந்தெரியாதோர் அடித்து நொருக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

கனகராயன் குளப் பகுதியில் அமைந்துள்ள விசேட காவல்துறை நிலையத்துக்கருகிலிருந்த 210ஆவது கிலோமீற்றர் கல்லுக்கு முன்னால் 3அடி உயரத்தில் புத்தர் சிலை ஒன்றும் ஒன்றரை அடி புத்தர் சிலையும் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலையே இடம்பெற்றிருக்கக்கூடும் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைகளை காவல்துறையினர் விசாரணைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கனகராயன் குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.