சிறீலங்கா அதிபரின் உத்தியோ வலைத்தளத்திற்கு சைபர் தாக்குதல் நடாத்திய 17 வயது மாணவன் கைது

346 0

web6-1சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் புகுந்து, அதிலுள்ள தரவுகளை அழித்து, அவருக்கு எதிராக சைபர் போர் எச்சரிக்கை விடுத்த 17 வயது மாணவனை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இரண்டு நாள் விசாரணைகளின் பின்னர் கடுகண்ணாவையைச் சேர்ந்த 17 வயது மாணவனை குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் இணையக் குற்றப் பிரிவு காவல்துறையினரும் இணைந்து இந்த மாணவனைக் கைது செய்தனர்.

கடந்த 25ஆம் திகதி சிறீலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் புகுந்து அதனை முடக்கியதுடன், பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஊடுருவி அதிலுள்ள தகவல்களை அழித்துள்ளார்.

இதனையடுத்து அதிபரின் இணையத்தளம் முற்றாக முடக்கப்பட்டது.

இதன்மீது தாக்குதல் நடாத்தியவர்க்ள, தாம் முன்வைக்கும் கோரிக்கைக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன இணங்கவேண்டுமெனவும் இல்லாவிட்டால் அவரது இணையத்தளத்தின்மீது சைபர் தாக்குதல் நடாத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

சிறிலங்கா இளைஞர்கள் என்று தம்மை உரிமை கோரிய இவர்கள், க.பொ. உயரத் தரத் தேர்வை ஏப்ரலில் நடத்த எடுத்துள்ள அரசாங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்து வழமை போல ஓகஸ்ட் மாதம் நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.