கடலில் மூழ்கியது இந்திய சரக்கு கப்பல்

384 0

Tamil_News_large_159547520160829043257_318_219ஓமன் நாட்டு கடல் பகுதியில், இந்திய சரக்கு கப்பல், அதிக சுமையை தாங்காமல் கடலில் மூழ்கியது; அதில் இருந்த ஊழியர்கள், 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் இருந்து, இந்தியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல், சரக்குகளை ஏற்றிக் கொண்டு, ஏமன் நாட்டின் அல் முக்காலா துறைமுகத்திற்கு சென்றது; அதில், 69 வாகனங்கள், டயர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இருந்தன.

ஓமன் நாட்டு கடல் பகுதியில் நேற்று முன்தினம் சென்ற போது, அதிக சுமை இருந்ததால், பாரம் தாங்காமல், அந்த கப்பல் மூழ்கத் துவங்கியது. இதையடுத்து, அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், கப்பலில் இருந்த ஊழியர்கள், ௧௧ பேரையும் பத்திரமாக மீட்டனர்.